2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘முஸ்லிம்கள் நடுநிலைமிக்கவர்கள்’

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். இர்சாத்

“இலங்கையில் முஸ்லிம்கள் யாருடைய எதிரிகளும் அல்லர். மாறாக, நடுநிலைமிக்கவர்கள் என்ற செய்தியை மு.கா காட்டியிருக்கின்றது ” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேலைவாய்ப்புச் செயளாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல் தவம் தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மு.கா சார்பாக சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். 

“முஸ்லிம்களும் சரி,  முஸ்லிம் காங்கிரஸும் சரி, இன்றைய அரசியலில் எல்லோரோடும் இணைத்து வாழவும் பயணிக்கவுமே நாங்கள் விரும்புகிறோம் என்ற  செய்தியைச்  சொல்லக் கிடைத்த தருணத்தை மு.கா சரியாகப்     பயன்படுத்தியிருக்கிறது” எனவும் ​அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .