2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாக்களிக்காத தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வாக்களிக்காததால், அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

விருகம்பாக்கம், காவேரி பள்ளியில், நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது மனைவி பிரேமலதா மட்டும் வந்து வாக்களித்தார். விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பர் என, பிரேமலதா கூறிச் சென்றார். பிற்பகலில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் வந்து வாக்களித்தனர்.

'விஜயகாந்த், மாலையில் வந்து வாக்களிப்பார்' என, விஜய பிரபாகரன் கூறினார். இதனால், காலை முதல் இரவு, 7:00 வரை, விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து, தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்; கடைசி வரை, விஜயகாந்த் வரவில்லை. இதனால் அவர்கள் விரக்தி அடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .