2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அந்தமான் நிகோபார் தீவுகளில் பாரிய நிலநடுக்கம்

Super User   / 2010 ஜூன் 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில்,  இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, மியான்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் 350,000 பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜப்பானில் இன்று காலை 6.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .