2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிர்கிஸ்தானில் இனக்கலவரம்; 300,000 மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக கணக்கெடுப்பு

Super User   / 2010 ஜூன் 18 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிர்கிஸ்தானில் ஏற்பட்டிருந்த இனக்கலவரம்  காரணமாக 300,000  மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையம் தெரிவித்தது.

இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருந்த போதிலும், இன்னும் 40,000 பொதுமக்களுக்கு தற்காலிகக் கூடாரங்கள் தேவைப்படுவதாகவும் அந்த முகவர் நிலையம் குறிப்பிட்டது. 

தென் கிர்கிஸ்தானில் ஏற்பட்டிருந்த இனக்கலவரத்தில் இதுவரையில் 180 பொதுமக்கள் உயிரிழந்திருக்கும் அதேவேளை, 1900 பேர் காயமடைந்துள்ளனர்.

கிர்கிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த பகியெவ் குர்மன் பெக்  கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகியதையடுத்து, ஓஷ் பகுதியில் வன்முறை இடம்பெற்று வந்திருந்தது.  பாகியோவ் ஆதரவாளர்கள் இங்கு அதிகம் வசிப்பதே, இதற்கு முக்கிய காரணமாகும்.

கிர்கிஸ்தானில் இடம்பெற்ற மோசமான வன்முறைச் சம்பவமாக இது கருதப்படுகிறது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .