2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் 7 தொண்டுப் பணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் 7 தொண்டுப் பணியாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு பலியானவர்களில் 6 பெண் தொண்டுப் பணியாளர்களும் அடங்குவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

வட – மேற்கு பாகிஸ்தானிலுள்ள சிறுவர் சமூக மையத்திற்கு அருகிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரையில் உரிமை கோரவில்லையென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .