2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈரான் விமான விபத்தில் 11 பேரும் பலி

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியைச் சேர்ந்த தனியார் விமானமொன்று, ஈரானில் நேற்று முன்தினம் (11) விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 பேரும் பலியாகினர் என, அதிகாரிகள் நேற்று (12) தெரிவித்தனர். செல்வந்தக் குடும்பமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவரும் அவரது நண்பர்களுமே, இவ்வாறு பலியாகியுள்ளனர்.

டுபாயில் இடம்பெற்ற, திருமணத்துக்கு முன்னரான கொண்டாட்டமொன்றை முடித்துக்கொண்டு, இவர்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்த போதே, விபத்து ஏற்பட்டுள்ளது.

துருக்கியைச் சேர்ந்த வணிகரான ஹுஸைன் பஸாரன் என்பவரால் உரிமைக்கப்படுத்தப்பட்ட இவ்விமானத்தில், 8 பயணிகளும் 3 பணியாளர்களும் பயணித்துள்ளனர். அவ்வாறு பயணித்தோரில், பஸாரனின் மகளான மினாவும், அவரது நண்பர்களுமே உள்ளடங்கியிருந்துள்ளனர்.

இக்குழுவினரால், இறுதியாக வெளியிடப்பட்ட புகைப்படமாக, மினாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில், மினாவும் அவரது 7 நண்பிகளும் காணப்படும் புகைப்படம் அமைந்துள்ளது.

என்ன காரணத்துக்காக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது, தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விமானம் தீப்பிடித்து எரிந்தது என, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, யாரும் தப்பவில்லை எனவும், அனைவரின் உடல்களும், எரிந்த வண்ணம் காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .