2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சவூதிக் கூட்டணி தாக்குதல்: 25 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் வடக்கு சாடா மாகாணத்திலுள்ள சந்தையொன்றின் மீது, சவூதி தலைமையிலான கூட்டணியின் விமானத் தாக்குதலில், குறைந்தது 25 யேமனியப் பிரஜைகள் கொல்லப்பட்டதாக, சாடாவிலுள்ள, ஹுதிகளால் நடாத்தப்படும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரான வைத்தியர் அப்டெலிலஹ் அல்-அஸ்ஸி தெரிவித்துள்ளார்.   

சவூதி எல்லைக்கு அருகிலுள்ள ஷடா மாவட்டத்திலுள்ள அல்-மஷ்னக் என்ற சந்தை மீது, இரண்டு தடவைகள், விமானமொன்று,  நேற்று முன்தினம் (17), தாக்குதல் நடத்தியதாக, அல்-அஸ்ஸி மேலும் கூறியுள்ளார்.   

இந்நிலையில், மேற்கூறப்பட்ட தாக்குதல் இடம்பெற்ற பகுதியில், ஆட்லறி தாக்குதலுக்கு இலக்காவோம் என்ற அச்சத்தில், குறிப்பிட்ட நேரத்துக்கு, தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு, மீட்பு அணிகள் செல்லவில்லை என, அல்-அஸ்ஸி, நேற்று  (18) மேலும் தெரிவித்துள்ளார்.  

நேரடியாக, சவூதி எல்லையுடன் உள்ள சாடா மாகாணத்தில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதான, மேற்கூறப்பட்டவாறான செய்திகளை, யேமனின் இணையத்தள செய்தி நிறுவனங்கள் சிலவும் வெளியிட்டிருந்தன.   

எவ்வாறெனினும், மேற்கூறப்பட்ட செய்தி குறித்து கருத்துக் கேட்பதற்கு, சவூதி தலைமையிலான கூட்டணி அதிகாரிகளை, உடனடியாக அடைந்திருக்க முடியவில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .