2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ்.கூடைப்பந்தாட்ட அணி சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


சுன்னாகம் பொலிஸாரும் உடுவில் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய புத்தாண்டு விளையாட்டு விழா கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ்.மாவட்ட கூட்டு கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாகியது.

மேற்படி கூடைப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை (19) மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியும் இராமநாதன் மகளிர் கூடைப்பந்தாட்ட அணியும் மோதின.

முதல் பாதியாட்டத்தில் யாழ்.மாவட்ட கூட்டு அணி 17:14 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய யாழ்.மாவட்ட கூட்டு அணி 10:08 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

இறுதியில் யாழ்.மாவட்ட கூட்டு அணி 27:22 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .