2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி

Editorial   / 2017 மே 24 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறையினருக்கு, அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேசிய சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தலைமையில், செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே மேற்கண்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது. 

தேசிய நெற்பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நுகர்வோருக்கு வசதியான விலையிலும் அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவான முறையிலேயே அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவானது, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .