2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவசரகால சட்ட விதிகளின் கீழ் 700 பேரிடம் விசாரணை

Super User   / 2010 மார்ச் 21 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள  700 சந்தேக நபர்களிடமும்  விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக  பயங்கரவாத தடுப்புப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதத்திற்கான அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்ட பின்னரும் 700 சந்தேக நபர்களிடமும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அந்த வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியன விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 700 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், இதில் பெரும்பாலனவர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டதாகவும்  பயங்கரவாத தடுப்புப் பிரிவு வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .