2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'உதம்விட சமரே' சுட்டுக்கொலை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெயங்கொட ரயில் நிலையத்துக்கு அருகாமையில் நேற்று (24) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நிட்டம்புவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 42 வயதுடைய 'உதம்மிட சமரே' என்பவர், கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சகாக்கள் நால்வருடன் காரொன்றில் சென்று கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் காரிலிருந்த மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அந் நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .