2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் சிறைக்கு செல்வார்கள்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், விரைவில் சிறைக்கு செல்வார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

இவர்களில் பலருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் அதிகமானோர் வெலிக்கடை அல்லது போகம்பறை சிறைச்சாலை செல்வார்கள். அவர்கள் தேசியப்பட்டியலுக்கு தெரிவானாலும் இவர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறுத்தப்படமாட்டாது எனவும் இவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .