2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குடிபோதையிலிருந்தவர் தள்ளிவிட்டு நபர் பலி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை (05) இரவு இருவருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் குடிபோதையிலிருந்தவர், ஒருவரைத் தள்ளிவிட்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட 65 வயதுடைய நபரே, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

சடலம், கம்பஹா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்துக்கு காரணமான குடிபோதையிலிருந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .