2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி

Editorial   / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கை பேணும் வகையில், முப்படைகளை அழைக்கும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, விசேட வர்த்தமான அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி, நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில், பொது பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அமைதியை நிலைநாட்டும் பணிகளில், முப்படையினர் ஈடுபடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக, இராணுவ வீரர்களை சேவையில் ஈடுபடுத்துவதாகவும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .