2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜெனரல் பொன்சேகா தேசத்துரோகி பாதுகாப்பு செயலாளர் குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு பொய்யர், தேசத்துரோகி. இராணுவத்தினர் மீதான யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கினால் தூக்கிலிடப்படுவார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பீ.பீ.சி உலகச் சேவையின் ஹார்ட் டோக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

"போர்க்குற்றங்கள் குறித்து சரத் பொன்சேகாவுக்கு தகவல்களை வழங்க முடியாது. அவர் தான் போருக்கான கட்டளைகளை வழங்கினார். இந்நிலையில் நாட்டையும் இராணுவத்தினரையும் காட்டிக் கொடுப்பதானது ராஜ துரோகமாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. பொய் கூறுவது, நாட்டைக் காட்டிக்கொடுப்பது மற்றும் எமது நாட்டு இராணுவ வீரர்களைக் காட்டிக்கொடுப்பது இதுவல்லவா போர்க்குற்றங்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் போர்க்குற்றங்கள் குறித்து மூன்றாம் தரப்பு விசாரணை நடத்துவதை நாம் நிராகரிக்கின்றோம். இலங்கை சுதந்திரமான நாடு, இவ்வாறான விடயகங்கள் குறித்து விசாரணை நடத்தும் இயலுமை இலங்கைக்கு இருக்கிறது எனவும் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Tuesday, 08 June 2010 05:35 PM

    பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கருடனைச் சுகம் கேட்டால் யாரால் என்ன செய்ய முடியும்?

    Reply : 0       0

    xlntgson Wednesday, 09 June 2010 09:11 PM

    தூக்கிலிடுவது போன்ற விவகாரங்களை ஒரு நீதிபதிகூட தனியாக முடிவெடுக்கமாட்டார், பாதுகாப்புசெயலாளரின் பேச்சினாலேயே அதை செய்ய இயலாதென்று தெரிகின்றது, ஒருவேளை இராணுவ நீதிமன்று மரணதண்டனை விதித்தாலும் கூட இந்த ஒரு பகிரங்க அறிக்கையே கூட இராணுவ நீதி மன்றத்தை தாக்கம் (influence) செய்திருக்கலாம் என்று வாதிட்டு சிவில் நீதிமன்றில் வென்று விடலாம். பொன்சேகா சந்தோஷம் அடையலாம், இப்பேச்சையிட்டு! தலை தப்பித்தது. அரசின் அனுமதியின்றி இவர் எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்று சாட்சி கூறுவார்? கண்கண்ட சாட்சி ஒருவரும் இல்லை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .