2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 மார்ச் 05 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் தொடர்பில்  தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (05) நடைபெறவுள்ளது.

இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியினால் ஏற்கெனவே வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. 

தேர்தல் தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

இதேவேளை, பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் தேர்தல் நடவடிக்கை பிரிவை அமைக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .