2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டக்களப்பிலுள்ள சினிமா திரையரங்கத்திற்கு தீ வைப்பு

Super User   / 2010 ஜூன் 18 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நகரிலுள்ள சினிமாத் திரையரங்கமொன்றிற்கு இன்று அதிகாலை  இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள சாந்தி திரையரங்கத்திற்கே இவ்வாறு  தீ வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 18 June 2010 09:43 PM

    இராவணன் படம் இங்கு திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாம் அந்த படத்தின் எந்த காட்சியை ஆட்சேபித்து அல்லது முழுப்படத்தையுமே ஆட்சேபிக்கின்றார்களா? விபரங்கள் முழுமையாக வந்ததும் தான் ஏன் எதற்கு என்று தெரியும். அது சரி, எதிர்ப்பு காட்ட திரை அரங்குளை எரித்தால் தானா, வேறு நாடுகளின் ஒவ்வாமை கலாச்சாரம் நமக்கும் பிடித்துக்கொண்டு விட்டதோ? அனுமதிப்பதும் அனுமதிக்காததும் பட தோல்வியிலே தெரியுமே, வன்முறையின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க முடியுமென்றால் எதிராளிகளும் அதேமுறையில் முயற்சிக்க மீண்டும் குழப்பம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .