2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு பிடியாணை உத்தரவு

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

இலஞ்ச உழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையிலேயே அவருக்கான பிடியாணை உத்தரவினை நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மொகமட் முஸாம்மிலுக்கு 4,200,000 ரூபாவினை இலஞ்சமாக வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .