2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹேமசிறி, பூஜித்தின் பிணை மனுக்கள் நாளை விசாரணைக்கு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின், பிணை மனு இன்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சில விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக குறித்த மனுவை நாளை (27) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில். கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நாளை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .