2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியாவிலிருந்து 100 பஸ்கள் இறக்குமதி

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

இலங்கை போக்குவரத்து சபை ஒவ்வொன்றும் 4 மில்லியன் பெறுமதியான 100 புதிய பஸ்களை இறக்குமதி செய்யவுள்ளது.

இதனையடுத்து இன்னும் 400 பஸ்களை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம்.டி.பந்துசேன தெரிவித்தார்.

பொது பஸ் போக்குவரத்தில் 30 சதவீதத்தை இலங்கை போக்குவரத்து சபை நடத்துகின்றது. இதை 40 சதவீதமாக அதிகரிக்கவுள்ளோம். இதற்கு இன்னும் 2,000 பஸ்கள் தேவை என அவர் குறிப்பிட்டார்.

புதிதாக கொள்வனவு செய்யப்படும் பஸ்கள் நீண்ட தூர சேவையில் ஈடுபடும் என தலைவர் எம்.டி.பந்துசேன கூறினார்.

கிராமங்களில் சேவையில் ஈடுபடுவதற்காக சீ வகையான  500 பஸ்களை இறக்குமதி செய்ய திறைசேரி நிதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .