2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபசாரத்திற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் இலங்கை யுவதிகள்

Super User   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜமீலா நஜிமுதீன்)


இலங்கை யுவதிகள் பலவந்தமாக விபசாரத்திற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து, குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நடன நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக்கூறி, மேற்படி யுவதிகள் விபசாரத்திற்குத் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பெருந் தொகையான பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்நடவடிக்கைக்கு பிரதான ஏற்பாட்டாளராக செயற்பட்டதாகக் கருதப்படும் நபர் ஒருவர் தற்போது குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு வட்டாரங்கள் டெய்லி pரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.


சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • rajendransoris Wednesday, 11 August 2010 10:57 PM

    இலங்கை அரசு ஒரு நல்ல அரசா? எங்கள் தமிழ் மக்களை கொடுமைபடுத்திய அரசு ஒரு நல்ல அரசே இல்லை.
    இவன், இராஜேந்திரன் ஷோரிஸ் , துபாய்

    Reply : 0       0

    rajendransoris Wednesday, 11 August 2010 11:04 PM

    என் அருமை மக்களே நீங்க எல்லாரும் நல்ல இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    Reply : 0       0

    abdul Thursday, 12 August 2010 10:45 PM

    இது ஸ்ரீலங்கா அரசின் குறை இல்லை.இது தனி பட்ட வியாபாரம்.துபாய் மனிதன் அமைதி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .