2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பணிப்பெண்கள் தாயகம் திரும்பினர்

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லெபனானில் உரிய அனுமதியின்றி தங்கியிருந்த இலங்கைப் பணிப்பெண்களில் நூற்றுக்கணக்கானோர் லெபனான் அரசின் பொதுமன்னிப்பையடுத்து தாயகம் திரும்பியுள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் தண்டனையின்றி தாயகம் திரும்புவதற்கு லெபனான் அரசாங்கம் 3 மாதகால அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மன்னிப்பு அவகாசத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் நேற்று லெபனானிலிருந்து புறப்பட்டதாக லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் எம்.மஹ்ரூப் தெரிவித்தார்.

தூதுவர் மஹ்ரூப்பின் கோரிக்கையைடுத்து லெபனான் அரசாங்கம் மேற்படி பொது மன்னிப்பு அவகாசத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .