2024 மே 14, செவ்வாய்க்கிழமை

இலவச கல்வியை சீர்குலைக்கும் தனியார் பல்கலைகள் இலங்கைக்கு வேண்டாம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலவசக் கல்வியை சீர்குலைக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் எமது நாட்டுக்குத் தேவையில்லை. இதனால் அவற்றை ஆரம்பிக்க வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கா இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இலங்கையில் இலவசக் கல்வியென்பது இல்லாவிடில் எஸ்.பி.திஸாநாயக்கா உயர்க் கல்வி அமைச்சராகவும் பேராசிரியர் காமினி சமரநாயக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்க முடியாது என்றும் அனுர குமார எம்.பி. குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • பாஹிம் Thursday, 09 December 2010 09:37 PM

    இலங்கையின் பணம் கல்வி என்ற பெயரில் ஏராளமாக வெளிநாடுகளுக்கு செல்வது இவருக்கு தெரியவில்லை.

    Reply : 0       0

    xlntgson Friday, 10 December 2010 08:52 PM

    இவ்வாறுதான் சர்வதேசப் பாடசாலைகள் வந்தன, இப்போது அரச பாடசாலைகளுக்கு மூடு விழா!
    சர்வதேச பல்கலைக்கழகங்கள் இங்கு காலூன்றியதும் அரச பல்கலைகளுக்கு மூடுவிழா?
    பல்கலைகளில் அமைதி இன்மை என்றதுமே கூட இதைப்பற்றி நான் முணுமுணுத்தேன், என்றாலும் நான் ஜேவிபிக்கு எதிரானவன்!
    ஜேவிபிதான் பல்கலை அமைதி இன்மைக்கு காரணம் என்று இப்போது நினைக்க முடியாதிருக்கிறது.
    கல்வி வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்றால் இலவசக்கல்வியை காடைத்தனமாக்க வேண்டும் அல்லது அதில் பெறுபேறு பெற்றாலும் புறக்கணிக்க வேண்டும் அரைப்படித்தவர்கள் என்று!

    Reply : 0       0

    xlntgson Saturday, 11 December 2010 08:59 PM

    வெளிநாட்டு பல்கலைகள் இங்கு வந்தால் அந்நியச் செலவாணி மிஞ்சும் என்பதை ஏற்க இயலாது. அப்பல்லோ ஆஸ்பத்திரி இங்கு வந்தது அப்படிக்கூறித்தான் கடைசியில் லங்கா ஆஸ்பத்திரி ஆகிவிட்டது! இவ்வாறான பல்கலைக் கழகங்களுக்குப்போய் படிக்கிறவர்களுக்கும் இங்கேயே பட்டம் பெருகின்றவர்களுக்கும் இடையில் பிரச்சினை இருக்காது என்பதற்கில்லை. கேசினோக்களில் கிடைக்கும் $கள் இவர்கள் கொண்டுபோவதற்கு போதுமோ, தெரியாது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .