2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேச விசாரணைக் குழு முன்னிலையில் இலங்கை இழுக்கப்படலாம்: அமெரிக்கா

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொலை செய்தமைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் இழுக்கப்படும் ஆபத்தை இலங்கை எதிர்நோக்குவதாக  தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தளவில் வெளி விசாரணையொன்றைவிட, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நியமங்களுக்கு அமைவாக சொந்த விசாரணையொன்றை நடத்துவது சிறந்த தேர்வாகும் என அவர் தெரிவத்துள்ளார்.

'இவ்விடயத்தில் சர்வதேச தரநியமங்களை அடைவதற்கு இலங்கை விரும்பாவிட்டால் இவ்விவகாரத்தை ஆராய்வதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அழுத்தம் ஏற்படலாம் என்பதை கூறுவது முக்கியமானது' என அவர் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • SIDDEEQUE Wednesday, 02 March 2011 04:45 PM

    அமெரிக்கா தலை இடாத நாடு இலங்கை மட்டும்தான். நமது ஜனாதிபதி மக்களுடன் erunthal avar ஒரு சாதாரண குடிமகன். nimmathiyane valkkayai thanthe awarai அல்லாஹ் paathuhaappaan

    Reply : 0       0

    xlntgson Wednesday, 02 March 2011 08:27 PM

    அமெரிக்கா மட்டும் உலகில் வல்லரசாக இருந்தால்! சீனாவுக்கு கடனை வைத்து விட்டு இந்தியாவின் பக்கம் திரும்பி விட்டனர், இந்தியாவுக்கு இலேசில் 'தொப்பி' போடலாம் என்றோ தெரியாது. நமது திருட்டு வாடிக்கையாளர்கள் ஒரு கடையில் கடனை வைத்து விட்டு கடையை மாற்றி விடுவது போல மகா கேவலம், வல்லரசாம் வல்லரசு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .