2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இது இடி அமீன், கடாபி பாணி அரசாங்க அமைப்பு கொண்ட நாடல்ல: ஐ.தே.க.

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமது கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொள்ளப்படும் நிலையில், தமக்கு எதிர்க்கட்சி வேண்டும் என அரசாங்கம் கூறுவதன் உண்மை தன்மை குறித்து சந்தேகம் ஏற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

'இந்நாட்டில் ஜனநாயகம் மோசமாக அழிவடைந்து வருகிறது என்பதை நாம் வலியுறுத்த வேண்டியிருக்கிறது' என அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட உரையின்போது அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த ஐ.தே.க. உட்பட எதிர்க்கட்சியினர் மீது அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் மேற்கொண்ட தாக்குதல் இதற்கு புதிய உதாரணமாகும்.

ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கைக்யி கம்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான ராஜபக்ஷ முன்னிலையில் எதிர்க்கட்சி எம்.பிகள் தாக்கப்பட்டனர். இது ஒரு ஜனநாயக நாடு. மாறாக இடி அமீன், பொகாஸா (மத்திய ஆபிரிக்க குடியரசின் முன்னாள் தலைவர்), கேணல் கடாபி ஆகியோரின் பாணியிலான ஆட்சிமுறைமை கொண்ட நாடல்ல' என கரு ஜயசூரிய கூறினார்.

 


You May Also Like

  Comments - 0

  • j.sanjai Wednesday, 23 November 2011 02:16 AM

    இப்படியே நாடு போகுமானால் இடியமீன், கடாபிக்கு நடந்தது தான் நடக்கும் என்பதை சொல்லாமல் செல்லியுள்ளீர்கள் ஷபாஸ் ஐ.தே.க..

    Reply : 0       0

    samuha thondan Wednesday, 23 November 2011 07:26 PM

    அப்டி நடந்தால் நாடு நல்லா இருக்கும் போல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .