2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

"சிறைச்சாலை அதிகாரிகளால் பொன்சேகாவுக்கான சிகிச்சை புறக்கணிப்பு"

Menaka Mookandi   / 2011 நவம்பர் 23 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரொமேஸ் தனுஷ்க சில்வா)

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்றைய தினம் தனது சிகிச்சைக்காக கொழும்பு நவலோகா வைத்தியசாலைக்கு செல்லவேண்டியிருந்த போதிலும் அதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொள்ளாத பட்சத்தில் அவருக்கான சிகிச்சைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவைப் பார்வையிட்டுத் திரும்பிய திஸ்ஸ அத்தநாயக்கா எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவரது சிறைச்சாலை விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனாவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • a.fareed Thursday, 24 November 2011 12:41 AM

    அநியாயம் என்றும் நிலைத்ததாக சரித்திரம் இல்லை.

    Reply : 0       0

    kalmunaiyaan Thursday, 24 November 2011 02:29 AM

    இதுதான் ஜனநாயகம்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .