2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மிலங்கா விலைச் சுட்டெண்ணைக் கைவிட கொழும்பு பங்குச்சந்தை தீர்மானம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிலங்கா விலைச்சுட்டெண்ணைக் கைவிடப்போவதாக கொழும்பு பங்குச்சந்தை அறிவித்துள்ளது. 2013 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து புதிய சுட்டெண்ணான ‘S & P Sri Lanka 20’ அறிமுகம் செய்யப்படுவதால் மிலங்கா விலைச்சுட்டெண் கைவிடப்படுவதாக பங்குச்சந்தை குறிப்பிட்டது.

கொழும்பு பங்குச் சந்தையை பொறுத்தவரையில் இது முக்கியமான ஒரு முன்னேற்றமாகும். ஏனெனில், முன்னர் எம்மிடம் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற ஒரு சுட்டெண் இருக்கவில்லை.

நாம் மிலங்கா விலைச் சுட்டெண்ணையும் தொடர்ந்து பேணி வந்தால் அது ஒரே வேலையை இருவர் செய்வது போலாகிவிடும் என கொழும்பு பங்குச் சந்தை தலைவர் கிறிஷான் பாலேந்திரா கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .