2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கேஸ் விலையை அதிகரிக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயுவின் (கேஸ்) விலையை அதிகரிப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் லாப் கேஸ் கம்பனி அனுமதி கோரியுள்ளது என்று அவ்வதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

இதற்கமைய, சர்வதேச சந்தையில் கேஸ் விலை தொடர்பில் அண்மைக்காலமாக நிலவிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து அவதானித்து வருவதாகவும் அதன் பின்னரே மேற்படி நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், குறித்த கம்பனிக்கு கேஸ் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • Kanavaan Monday, 19 November 2012 04:10 PM

    எத்தனை தரம்தான் கூட்டியாச்சு, நீங்கள் கூட்டிக்கொண்டே போங்கள் நாங்களும் அழுது கொண்டே காலத்தைப் போக்குகிறோம். எங்களுடைய சாபம்தான் உங்களுக்கு அழிவு.. எங்களுக்கு விடிவு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .