2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதம நீதியரசரின் ரீட் மனுவுக்கு இடையீட்டு மனுத்தாக்கல்

Kanagaraj   / 2013 ஜனவரி 02 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுவொன்று நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் ரீட் மனுவை செல்லுப்படியற்றதாக்க வேண்டும் எனக்கோரியே இந்த இடையீட்டு மனுவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க சம்மேளனம் தாக்கல் செய்துள்ளது.

தனக்கு எதிராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை வலுவற்றதாக்குவதற்கான கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராகவே இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுமீதான விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவிருக்கின்ற நிலையிலேயே இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .