2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நூரி தோட்ட முகாமையாளர் கொலை: அடையாள அணிவகுப்பு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 24 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகலை நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேரா கொலைத்தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை இனங்காண்பதற்கான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

21 சந்தேகநபர்களையும் அடையாளம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பே அவிசாவளை பிரதான நீதவான் ஜி.எச்.ஏ செனவிரத்னவினால் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடையாள அணிவகுப்பு இன்று புதன்கிழமை நடைபெறவிருந்த நிலையிலேயே சாட்சியாளர்களுக்கு சுகயீனமடைந்துள்ளமையினால் அடையாள அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெரணியகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அத்தகொட்டா என்றழைக்கப்படும் அனில் சம்பிக்கா உள்ளிட்ட 21 சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றதிற்கு அழைத்து வரப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .