2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முழந்தாளிடவைத்தவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுசித்த பெர்னண்டோ

ஆசிரியையை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் முழந்தாளிடவைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் நேரடியாகவே தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னர் நீதவான் விசாரணை நடைபெறும்.

எனினும், இந்த சம்பவத்தினை பாரதூரமாக கருதியே நீதவானின் விசாரணை தவிர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபரினால் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .