2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

160 நாட்களில் எவரும் கடத்தப்படவில்லை: சம்பிக்க

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 160 நாட்களில் எந்தவொரு நபரும் கடத்தப்படவில்லை. இதன்மூலம், இந்த நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை புலனாகிறது என்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியான பிறகு புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகும் என்று அப்போது பரப்பப்பட்ட வதந்திகள் இன்று பொய்யாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் புலிகள் இயக்கம் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிலவின. ஆனால் இன்று, புலிகள் தரப்பில் இருந்தவர்கள் தனியாக போட்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது' என்றார். 

'நாம் இருக்கும் இடத்தில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை. புலிகள் இயக்கமாகட்டும், அரசாங்க தரப்பினரை இயக்கும் பயங்கரவாதமாகட்டும் அல்லது வெள்ளை வான்களை இயக்கும் தீவிரவாதிகளாகட்டும், யாராக இருப்பினும் அவர்களுக்கு இங்கு இடமில்லை. 

கடந்த 160 நாட்களில் எவரும் கடத்தப்படவில்லை. வெள்ளை வான் கலாசாரத்தின் கீழ் எவரும் கொல்லப்படவில்லை. ஆக மொத்தத்தில் இந்த நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்று அமைச்சர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .