2024 மே 11, சனிக்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு வீடு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு வழங்கப்பட்டுள்ளது.

தொட்டலங்கை, மோதர உயன அருகில் இந்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பில் பேரில் இந்த வீடு வழங்கப்பவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொட்டாஞ்சேனை பெனடிக் கல்லூரி மைதானத்துக்கு முன்னால் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த சுமார் 250 – 300 பேர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

குறித்த மைதானத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இலக்கத் தகடு அற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் ரக வாகனமொன்றில் வந்திறங்கிய நால்வரே, துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தவர்களை குறுக்கிட்டு ரீ - 56 ரக துப்பாக்கியினால் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருந்தனர். 

இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தில் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டிருந்த போதிலும் அவர் மற்றொரு தரப்பினருடன் கொட்டாஞ்சேனை பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தார். 

ஏனையவர்கள், புளுமெண்டல் வீதியினூடாக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டு ஆமர் வீதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .