2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு பணத்துடன் சீன பிரஜைகள் இருவர் கைது

Gavitha   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து புதுடெல்லிக்கு சுமார் 7.8 மில்லியன் ரூபாய் பெறுமதியாக வெளிநாட்டு பணத்தையும் மாணிக்கக்கற்களையும் கடத்த முயற்சி செய்த இரண்டு சீன பிரஜைகளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளனர்.

26 மற்றும் 59 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து அமெரிக்க டொலர் 50,690ஐயும் தாய் பாஹ்த் (தாய்லாந்து நாட்டின் பணம்) 133,400ஐயும் கைப்பற்றியதாக சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

மேலும் 452,800 ரூபாய் பெறுமதியான 46 மாணிக்கக்கற்களையும் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .