2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரசியலில் தொடர்ந்திருப்பேன்: மஹிந்த

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாக அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறான சவால்களுக்கு முகம்கொடுத்தது. அவ்வாறான சவால்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள இந்த பெறுபேற்றை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தன்னுடைய இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையிலும் நாடு மற்றும் தேசத்துக்காக செய்த சேவையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் அமர்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .