2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

230 பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவியுயர்வு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிஸ் சேவையில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 230பேருக்கு கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கிணங்க இந்த 230பேரும் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டவர்கள் 12 பெண் பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குகின்றனர்.
சேவைக்காலம் மற்றும் சாதனைகளை கருத்திற்கொண்டு இந்த பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .