2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்று வரை 5400 முன்னாள் போராளிகள் விடுதலை - டியூ குணசேகர

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

சரணடைந்த முன்னாள் போராளிகளி 5400 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்  டியூ குணசேகர தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று வியாழக்கிழமை கடைசியாக வெலிகந்தை புன்வாழ்வு நிலையத்திலிருந்து 58 முன்னால் போராளிகள் என்னால் விடுதலை செய்யப்படதாகவும் அமைச்சர் கூறினார்.

வழக்கு தொடரப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களைத் தவிர ஏனைய அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .