2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சைப்ரஸில் 9 இலங்கையர்கள் கைது

Menaka Mookandi   / 2011 ஜனவரி 09 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியா பிரதேசத்தில் கடந்த 6ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நிக்கோசியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .