2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.ஓ.சி எரிபொருள் விலையை குறைத்தது

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோல் மற்றும்  டீசல் என்பவற்றின் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில், இரண்டு ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றொல் லீற்றர்  ஒன்றின் புதிய விலையை 2 ரூபாயால் குறைக்க ஐ.ஓ.சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அவ்வாறே ஓட்டோ டீசல் மற்றும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 2 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இந்த முறையின் அடிப்படையில் விலை குறைப்பை மேற்கொண்டுள்ளதாக, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .