2024 மே 08, புதன்கிழமை

கடற்படையினரின் வாகனம் மோதி நபர் ஒருவர் பலி

Editorial   / 2020 ஜனவரி 11 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் இன்று(11) காலையில் மோட்டார் சைக்கிளுடன் கடற்படையினரின் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த முல்லைத்தீவு - மல்லாவியைச் சேர்ந்த 32 வயதான ​கே.ஜீவன் என்பவர் உயிரிழந்துள்ள​தோடு, அவரின் மனை படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X