Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பில் காணமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"காணாமல்போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் தனது அடுத்த மாவட்ட ரீதியிலான பொதுமக்களுடனான சந்திப்பை ஜூலை 14ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் ஜூலை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியிலும் நடத்த திட்டமிட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது ஆணைக்குழுவிலுள்ள 7 ஆணையாளர்களும் பிரசன்னமாகவுள்ளதோடு காணாமற்போனோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள், ஊடகவியளாளர்கள் என்போரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவர்.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவர். இதன்போது காணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகம் தொடர்பிலான திட்டமிடல் மற்றும் வரையறைகள் தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக கேள்வியெழுப்பலாம்." என அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago