2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சப்ரகமுவ பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகுமென, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டீ. கித்சிறி தெரிவித்துள்ளார்.

அனைத்து பீட மாணவர்களும் 22ஆம் திகதி தத்தமது விடுதிகளுக்கு சமுகமளிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பானது 17ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .