2024 மே 14, செவ்வாய்க்கிழமை

டீ.கே.பீ.தசநாயக்க உள்ளிட்ட அறுவர் நிபந்தனை பிணையில் விடுதலை

Editorial   / 2018 ஜனவரி 12 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 பேரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கமாண்டர் டீ.கே.பீ.தசநாயக்க உள்ளிட்ட அறுவர் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் இன்றைய தினம் (12)  நீதிமன்றில் முன்னிலைப்படுதப்பட்ட போதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன  மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கமைய இவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பிரதி சனிக்கிழமைகளில் காலை 9-12 மணி வரையான காலப்பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .