2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாய்களை பிடிப்பதற்கான பதவி வெற்றிடம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 17 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகரசபையில் வெற்றிடமாகியிருந்த நாய் பிடித்தல் மற்றும் நாய்களை அழித்தல் தொடர்பான பதவிகளுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் இதற்கு எதிர்ப்புகள் தெரிக்கப்பட்டு வருவதால், அதனை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பதவிகள் உள்ளிட்ட 9 பதவிகளுக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான, விளம்பரங்கள் கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக  கொழும்பு மாநகரசபை விலங்குகளை கொள்வதாக, குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் நாய்களை கொல்வதற்கான பதவிகளுக்கு யாரையும் இணைத்துக்கொள்ளவில்லையென நகர ஆணையாளர் லலித் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .