2024 மே 02, வியாழக்கிழமை

போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் மாகாணத்தில், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

இது  தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் விரைவில் நடைபெறும் என்றும் இந்தத் திட்டத்துக்காக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரையும் பொலிஸாரையும் புதிய திட்டமிடலின் கீழ் இணைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

இத்திட்டத்தின் கீழ், மேல் மாகாணம் முழுவதும் போதைப் பொருள் வியாபாரத்தை முற்றாகக் கட்டுப்படுத்தவுள்ளதகாவும் பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள் அமைந்துள்ள பகுதிகள் தொடர்பில், விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .