2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மரணதண்டனையை நிறைவேற்றுதல்’ இரண்டு பதவி வெற்றிடங்கள்

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு  மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றுபவர் தொடர்பில் இரண்டு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இந்த பதவி வெற்றிடமாகவே காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இருவர் இந்தப் பதவிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்டபோதிலும் அவர்கள் பயிற்சியின் பின்னர் பதவி விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தூக்கிலிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் உபகரணங்கள் ஏற்கனவே  சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 13 மரணதண்டனை குற்றவாளிகள் காணப்படுவதோடு, அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .