Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின், அம்பலாந்தோட்டை - மிரிஜ்ஜவல சந்தியில், முச்சக்கர வண்டியும், பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே உயிரிழந்துள்ளனர்.
ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த, சேர்ந்த தந்தை, தாய், மற்றும் அவர்களது ஒரு வயது மற்றும் 8 வயது இரு பிள்ளைகள் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பஸ்ஸுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் சாரதிக்கோ, பயணிகளுக்ககோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும், பஸ்ஸின் சாரதி ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
1 hours ago