2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹம்பலாந்தோட்டையில் பஸ் விபத்து: ஒருவர் பலி 7 பேர் காயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பலாந்தோட்டை-நோனாகம பிரதேசத்தில், தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

நோனாகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து -கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பல மின் கம்பங்களுடன் மோதி இறுதியில் நோனாகம ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பஸ் வண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அதிக வேகத்தில் பயணித்தமையே விபத்துக்கு காரணம்  என, தெரிவித்த பொலிஸார் பஸ்ஸின் சாரதி நடத்துநர் ஆகியோர் விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை, ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .