2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலை அமைச்சின் சுற்றுலா விடுதி திறப்பு

Super User   / 2013 டிசெம்பர் 08 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை புல்மோட்டை வீதியிலுள்ள சலப்பையாறு எனும் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா விடுதி இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் இந்த சுற்றுலா விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார்  ஆறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் சகல வசதிகளுடனான ஐந்து அறைகள் உள்ளன.

இதன் திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, பிரதி அமைச்சர் சரத்குமார முத்துக்குமாரண மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரட்ண பள்ளேகம ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .