2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மணல் ஏற்றிய சாரதிக்கு அபராதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திர  நிபந்தனைகளை மீறி, மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா, இன்று (11) உத்தரவிட்டார்.

சந்தேகநபர், கிண்ணியா, மாஞ்சோலை சேனை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவரெனவும், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவருவதாக  தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், சட்டங்களை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .